Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

மியான்மரில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
09:58 AM Nov 16, 2025 IST | Web Editor
மியான்மரில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
Advertisement

கடந்த மார்ச் மாதம் 28-ம் தேதி மியான்மரில் 7.7 ரிக்டர் மற்றும் 6.4 ரிக்டர் அளவில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இதனால் மியான்மரின் பல்வேறு பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சுமார் 3,700 பேர் உயிரிழந்த நிலையில் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியானது.

Advertisement

இதனை தொடர்ந்து மியான்மரில் அவ்வப்போது சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில், மியான்மரில் இன்று காலை 2.40 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 23.95 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 94.20 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

Tags :
earthquakeMyanmarMyanmar Earthquake
Advertisement
Next Article