Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ ரயில் திட்டம் - தமிழ்நாடு அரசு ஒப்புதல்!

சென்னை பூந்தமல்லி - பரந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் வழித்தட திட்டத்தை இருகட்டங்களாக செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
06:13 PM Jun 02, 2025 IST | Web Editor
சென்னை பூந்தமல்லி - பரந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் வழித்தட திட்டத்தை இருகட்டங்களாக செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
Advertisement

சென்னை பூந்தமல்லியில் இருந்து திருமழிசை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாக பரந்தூர் வரை 52.94 கி.மீ தூர மெட்ரோ ரெயில் திட்டத்தை இரு கட்டங்களாக செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முதற்கட்டமாக ரூ.8,779 கோடியில் பூந்தமல்லி- சுங்குவார்சத்திரம் வரை 27.9 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ உயர் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.

Advertisement

இரண்டாம் கட்டமாக சுங்குவார்சத்திரம் - பரந்தூர் வரை 25 கி.மீ தூரத்திற்கு அமையவுள்ளது. பரந்தூரில் முன்மொழியப்பட்ட புதிய விமான நிலையம், திருமழிசையில் முன்மொழியப்பட்ட பேருந்து நிலையம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Tags :
MetroParandurPoonamalleeTN Govt
Advertisement
Next Article