Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மெத்தனம் காட்டும் காவல்துறை - நியூஸ்7 தமிழ் செய்தியாளர் தாக்கப்பட்டு அரை நாள் ஆகியும் FIR பதியப்படாத அவலம்!!

01:20 PM Jan 25, 2024 IST | Web Editor
Advertisement

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டு 12 மணி நேரத்திற்கு மேலாகியும் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யவில்லை.

Advertisement

நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா செய்தியாளராக பணியாற்றி வருபவர் நேசபிரபு.  இவர் நேற்று செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போதும், மற்ற நேரங்களிலும் மர்ம நபர்கள் சிலர் நோட்டம் விட்டுள்ளனர். இவரைப் பற்றிய தகவல்களையும் விசாரித்துள்ளனர்.

தன்னை நோட்டம் விடும் மர்ம நபர்கள் குறித்து காவல்துறைக்கு நேசபிரபு தகவல் தெரிவித்துள்ளார். தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினரிடம் கூறிய நேசபிரபுவிடம், நேரில் வந்து புகார் அளிக்கும்படியும், போதிய காவலர்கள் இல்லை என்றும் அலட்சியம் காட்டியுள்ளனர்.

இதையடுத்து மீண்டும் மர்ம நபர்கள் பின்தொடர, மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதிக்குச் சென்று மீண்டும் மீண்டும் காவல்துறையினரின் உதவியை நேசபிரபு கேட்டுள்ளார். அவ்வாறு காவல்துறையினரிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே,  5 கார்களில் வந்த மர்ம கும்பல் நேசபிரபுவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.

இதனால் கை, கால், முகம் என உடலின் பல்வேறு பகுதிகளில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்த நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபுவை, தகவலறிந்து வந்த காவல்துறையினர் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர்.  இதையடுத்து கோவை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது தாக்குதல் நடந்து 12 மணி நேரம் ஆகியும் இதுவரை FIR கூட பதிவு செய்யாத காமநாயக்கன்பாளையம் போலீசார், உறவினர்களிடம் புகார் வாங்காமல் காக்க வைத்துள்ளனர்.  மேலும் அவரின் மீதான தாக்குதலை மர்ம கும்பல் வீடியோவாக பதிவு செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பெட்ரோல் நிலைய அறைக்குள் பயந்து ஒளிந்த பிரபுவை வெளியில் இழுத்து அரிவாளால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அந்த பகுதியில் சிசிடிவி இருப்பதால் செய்தியாளரை வேறு பகுதிக்கு இழுத்து சென்று தாக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நேசபிரபுவின் உடலில் 65 இடங்களில் அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளதும், நரம்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நேசபிரபுவுக்கு பல்வேறு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. குறைந்தபட்சம் ரூ.20 லட்சம் மருத்துவ செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசே முழு மருத்துவ செலவையும் ஏற்க வேண்டும் என நியூஸ் 7 தமிழ் வலியுறுத்தியுள்ளது.

Tags :
AttackjournalistNesa Prabhunews7 tamilNews7 Tamil UpdatespalladamReporterTiruppurTN Govt
Advertisement
Next Article