Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மது போதையில் சிறுவர்களை தாக்கியதாக புகார் - பின்னணி பாடகர் மனோவின் மகன் #Rafimano மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

01:10 PM Sep 11, 2024 IST | Web Editor
Advertisement

மதுபோதையில் தாக்கியதாக பிரபல பின்னணி பாடகர் மனோ மகன் ரஃபி மனோ மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன் ரஃபி நேற்று இரவு மதுபோதையில் சிறார்களைத் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. மனோவின் மகன் உள்பட அவரது நண்பர்கள் சிலர் வளசரவாக்கத்தில் உணவகத்திற்கு சென்ற கிருபாகரன் என்ற சிறுவனையும், 16 வயது சிறுவன் ஒருவனையும் மதுபோதையில் சரமாரியாகத் தாக்கியதாக சொல்லப்படும் நிலையில் இந்த தாக்குதலால் அந்த 16 வயது சிறுவனுக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் வளசரவாக்கம் போலீசார் மனோவின் வீட்டிற்கு சென்று அவரது மகனிடம் நேரில் விசாரணை நடத்தியுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் மனோவின் மகன் மதுபோதையில் சிறுவர்களை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாடகர் மனோவின் மகன்களான சாஹீர், ரபிக் மீது வளசரவாக்கம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் 2 மகன்களும் தலைமறைவாகி விட்டதால் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags :
ManoRafimano
Advertisement
Next Article