பிராட்வே பேருந்து நிலையத்தை தீவுத் திடலுக்கு மாற்றத் திட்டம்! - சென்னை மாநகராட்சி அறிவிப்பு
பிராட்வே பேருந்து நிலையத்தை தீவுத் திடலுக்கு தற்காலிகமாக இடமாற்றத் திட்டமிட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
2002ம் ஆண்டுக்கு முன்னர் தமிழ்நாட்டின் அனைத்து இடங்களுக்கும் செல்லும் ஒரு முக்கிய பேருந்து நிலையமாக இருந்தது பிராட்வே என்று அழைக்கப்படும் பாரிமுனை பேருந்து நிலையம்தான். அதன்பின்னர் பிரம்மாண்டமான கோயம்பேடு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு பயணிகள் பயன்பாட்டிற்கு வந்தது.
அதன் பின்னர் மக்கள் புழங்கத் தொடங்கியதும் கோயம்பேடு பேருந்து நிலையம் வெளியூர்களுக்கு செல்லும் பேருந்து நிலையமாகவும் , பிராட்வே பேருந்து நிலையம் உள்ளூர் பேருந்து நிலையமாகவும் செயல்பட்டு வருகிறது. தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டு அவை பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
இதன்படி அடுத்த ஒரு சில மாதங்களில் பிராட்வே பேருந்து நிலையம் தீவு திடலுக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளது இதன்பிறகு பிராட்வே பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு போக்குவரத்து முனையம் அமைக்கும் பணி தொடங்கும். பிராட்வே பேருந்து நிலையம் இருந்த இடத்தில் 9 மாடிகள் கொண்ட வணிக வளாகத்துடன் கொண்ட பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது