Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"2027ல் சிறந்த படமாக பிச்சைக்காரன் 3 வெளியாகும்" - விஜய் ஆண்டனி!

எனது இறுதி காலத்தில் பொள்ளாச்சியில் வீடு வாங்கி ஓய்வெடுக்க விரும்புகிறேன் என்று விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
09:57 AM Jun 26, 2025 IST | Web Editor
எனது இறுதி காலத்தில் பொள்ளாச்சியில் வீடு வாங்கி ஓய்வெடுக்க விரும்புகிறேன் என்று விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
Advertisement

நடிகர் விஜய் ஆண்டனி நடித்த ‘மார்கன்’ திரைப்பட முன்னோட்ட விழா திருப்பூர் ஸ்ரீ சக்தி திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஜய் ஆண்டனி ரசிகர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கேள்விக்கு பதில் அளித்து ஆடிப்பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

Advertisement

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஜய் ஆண்டனி, ‘மார்கன்’ திரைப்படத்தில் புதிய இயக்குநரையும், தனது சகோதரியின் மகனை நடிகராகவும் அறிமுகப்படுத்துகிறேன். பல நூற்றாண்டுகளாக பெண்களுக்கு கொடுமை நடந்து வருகிறது. சமூக வலைதளங்கள் வாயிலாக பெண்கள் விழிப்புணர்வு அடைந்து வருகின்றனர்.

ஆண்களை விட பெண்கள் வலிமையானவர்கள். மார்கன் படத்தில் இதுவரை சொல்லப்படாத விசயங்கள் இறுதி 10 நிமிடத்தி்ல் சொல்லப்பட்டு இருக்கிறது. லாயர் படத்தில் ரவீனா டாண்டன், சுனில் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். விரைவில் அடுத்த நடிகர்களின் படத்திற்கு இசையமைக்க உள்ளேன்.

காந்தரா போன்று பான் இந்தியா படத்தில் விரைவில் நடிக்க உள்ளேன். குபேரா படம் நன்றாக உள்ளதாக கேள்விப்பட்டேன். பிச்சைக்காரன் பாகம் 3 வேறுபட்ட கதைக்களத்துடன் வெளி வரும். எல்லா அரசியல் கட்சிகளுக்கும் எனது ஆதரவு உள்ளது. நடிகர் விஜய் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வேண்டும்.

நடிகர் ஶ்ரீகாந்த் பழக இனிமையான மனிதர். அவரிடம் விசாரணை மட்டுமே நடந்து வருகிறது. கைது செய்யப்படவில்லை. பழைய பாடல்கள் திரைப்படத்தில் பயன்படுத்தும் போது உரிய இசையமைப்பாளர்களிடம் உரிய முறையில் மரியாதை செய்ய வேண்டும். பூமியில் கால்படும் போது மனது அமைதியாக இருப்பதாக உணர்வதால் காலணியை தவிர்த்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Tags :
actorBest filmmarkanmoviePichaikaran3PressMeetthirupurvijay Antony
Advertisement
Next Article