Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அமைச்சரவைப் பட்டியலில் முதலிடத்தில் பவன் கல்யாண் - ஆந்திராவின் துணை முதலமைச்சராக வாய்ப்பு!

10:29 AM Jun 12, 2024 IST | Web Editor
Advertisement

அமைச்சரவைப் பட்டியலில் முதலிடத்தில் பவன் கல்யாண் உள்ளதால் அவர் ஆந்திர மாநில துணை முதலமைச்சராக பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப் பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம், ஜனசேனா,  பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது.  175 பேரவை தொகுதிகளில் 164 தொகுதிகளையும்,  25 மக்களவைதொகுதிகளில் 21 தொகுதிகளிலும் தெலுங்கு தேசம் கூட்டணி வெற்றி பெற்றது.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெறும் 11 சட்டப்பேரவை மற்றும் 4 மக்களவை தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வியை சந்தித்தது.  இந்நிலையில்,  கிருஷ்ணா மாவட்டம்,  கன்னவரம் அருகே உள்ள கேசரபல்லி ஐடி பார்க் மைதானத்தில் 14 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமான அரங்கில் இன்று காலை 11:27மணிக்கு சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக முதலமைச்சர் பதவி ஏற்க உள்ளார்.  இந்த விழாவில் பிரதமர் மோடி, பல்வேறு மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள்,  விஐபிக்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

தேர்தல் வெற்றியை உறுதி செய்ததில் ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாணுக்கு பெரும் பங்குண்டு.  இவருக்கு வழங்கிய 21 சட்டப்பேரவை தொகுதி மற்றும் 2 மக்களவை தொகுதிகளிலும் தான் உட்பட தனது கட்சி வேட்பாளர்கள் அனைவரையும் வெற்றிபெற செய்துள்ளார்.

சந்திரபாபு நாயுடு நேற்று முன்தினம் டெல்லியிலிருந்து விஜயவாடாவிற்கு விமானம் மூலம் வந்தார்.  இதனைத் தொடர்ந்து  உண்டவல்லியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்று, அமைச்சர்கள், அமைச்சரவை குறித்து தனது கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகி களுடன் ஆலோசனை நடத்தினார்.

இன்று சந்திரபாபு நாயுடு ஆந்திர முதலமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில் அவரது தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள நபர்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிற்கு பிறகு பவன் கல்யாண் முதலாவதாக பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் துணை முதலமைச்சராக பதவியேற்க வாய்ப்புள்ளது. இதனைத் தொடர்ந்து சந்திர பாபுவின் மகனும் கட்சியின் பொதுச்செயலாளருமான நாரா லோகேஷ் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து மேலும் 22 நபர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். சந்திரபாபு நாயுடுவைத் தொடர்ந்து இவர்கள் அனைவரும் இன்று பதவியேற்க உள்ளனர். இவர்களுக்கு ஆந்திர மாநில ஆளுநர் அப்துல் நசீர் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புறுதி பிரமாணமும் செய்து வைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Andhra PradeshDeputy Chief MinisterElection2024Nara Chandra Babu Naidupawan kalyanPwer Star Power Kalyan
Advertisement
Next Article