Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது பாகிஸ்தான் அணி!

02:12 PM Oct 26, 2024 IST | Web Editor
Advertisement

இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட்டில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

Advertisement

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 24-ல் ராவல்பிண்டியில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி, 267 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அடுத்து விளையாடிய பாகிஸ்தான் 344 ரன்கள் குவித்தது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. 3-ம் நாளில் மீதமிருந்த 7 விக்கெட்டுகளை விரைவிலேயே இழந்தது இங்கிலாந்து.

36 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணி 3.1 ஓவரில் 37/1 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடரை 2-1 என பாக். வெற்றி பெற்றது. சௌத் ஷகில் ஆட்டநாயகனாகவும், சஜித் கான் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்கள்.

Tags :
Team Pakistan
Advertisement
Next Article