Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தென்மாவட்டங்களில் பெய்த கனமழை வெள்ளத்தில் மூழ்கி அழுகும் நெல், வாழை பயிர்கள்!

04:06 PM Dec 20, 2023 IST | Web Editor
Advertisement

தென்மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திருச்செந்தூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் பல்லாயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை, தென்னை, முருங்கை மற்றும் நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

தூத்துக்குடி,  திருநெல்வேலி,  தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.  பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.  இதன் ஒரு பகுதியாக திருச்செந்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் கனமழை வெள்ளத்தால் ஆறுகள், ஏரிகள்,  குளங்கள் நிரம்பி வழிகின்றன.

இதனால் திருச்செந்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பல்லாயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை, தென்னை, முருங்கை மற்றும் நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.  இதில் நெல் மற்றும் வாழை பயிர் மழை நீரில் அழுகும் நிலையில் இருப்பதால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.

இதுமட்டுமல்லாது,  3 நாட்களாக உணவு, தண்ணீர் ஏதும் கிடைக்காமல் தவிப்பதாக தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனிடையே தூத்துக்குடியில் மத்திய குழு இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தது.  தொடர்ந்து நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் ஆய்வு செய்ய உள்ளார்.  இந்நிலையில், தொடர்ந்து தென் மாவட்டங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Tags :
bananaDamagefloodsKorampallamnews7 tamilNews7 Tamil UpdatesThiruchendurThoothukudiTN GovtTrees
Advertisement
Next Article