Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

11:47 AM Jan 08, 2024 IST | Web Editor
Advertisement

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.  இதன் காரணமாக இன்று (ஜன.08) அடுத்த 3 மணி நேரத்திற்கு செங்கல்பட்டு,  காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம்,  கடலூர்,  மயிலாடுதுறை,  நாகப்பட்டினம்,  திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையத் தெரிவித்திருந்தது.

இதையும் படியுங்கள்: தொடர் கனமழை எதிரொலி – சென்னை புத்தகக் கண்காட்சி இன்று ரத்து!

மேலும் சென்னை,  திருவள்ளூர்,  திருவண்ணாமலை,  வேலூர்,  தஞ்சாவூர்,  புதுக்கோட்டை, தர்மபுரி,  கிருஷ்ணகிரி,  கன்னியாகுமரி,  திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் செங்கல்பட்டு,  காஞ்சிபுரம்,  ராணிப்பேட்டை,  விழுப்புரம்,  கடலூர், மயிலாடுதுறை,  நாகை,  திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags :
districtsHeavy rainfallnews7 tamilNews7 Tamil UpdatesOrange alertrainfalltamil naduWeather AlertWeather Update
Advertisement
Next Article