Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்! #SouthernRailway அறிவிப்பு!

04:09 PM Oct 09, 2024 IST | Web Editor
Advertisement

ஆயுதபூஜை, விஜயதசமி ஆகிய பண்டிகைகால விடுமுறையை முன்னிட்டு 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் நாளை மறுநாள் (அக். 11) ஆயுதபூஜை மற்றும் அக். 12-ம் தேதி விஜயதசமி பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளன. இந்த நாட்களைத் தொடர்ந்து, மறுநாள் அக். 13-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் 3 நாட்களும் தொடர் விடுமுறையாக அமைந்துள்ளது. எனவே, வெளியூர்களில் வசிப்பவர்கள் ஆயுத பூஜையை கொண்டாட சொந்த ஊர் திரும்புவர் என்பதால் பேருந்துகள், ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும்.

இந்நிலையில் ஆயுத பூஜையை முன்னிட்டு, சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே நாளை (அக். 10) மற்றும் அக்டோபர் 12 ஆகிய 2 தேதிகளிலும், அதேபோல் மறுமார்க்கத்தில் நாகர்கோவில் - சென்னை எழும்பூர் இடையே நாளை மறுநாள் (அக். 11) மற்றும் அக். 13-ம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், நாளை மற்றும் அக். 12 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரல் - கோட்டயம் (கேரளா) இடையே மற்றும் மறு மார்க்கத்தில் கோட்டயம் (கேரளா) - சென்னை சென்ட்ரல் இடையே நாளை மறுநாள் (அக். 11) மற்றும் அக். 13 ஆகிய தேதிகளிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும், எர்ணாகுளம் - மங்களூர் இடையே நாளையும் (அக். 10), மறுமார்க்கத்தில் மங்களூர் - எர்ணாகுளம் இடையே நாளை மறுநாளும் (அக். 11) சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
chennai centralchennai egmoreernakulamfestivalKottayamMangaloreNagarholeNews7TamilPooja Holidaysspecial traintrains
Advertisement
Next Article