Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு!

12:09 PM Dec 29, 2023 IST | Web Editor
Advertisement

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜைகளையொட்டி நாளை நடை  திறக்கப்படவுள்ளது.

Advertisement

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 16-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது.  41 நாட்கள் மண்டல காலம் நிறைவுப் பெற்று புதன் கிழமையன்று நடை மூடப்பட்டது.  இந்நிலையில் நாளை மகர விளக்கு பூஜைக்காக நடை மீண்டும் திறக்கப்படுகிறது.

ஜனவரி 15-ம் தேதி மகர விளக்கு பூஜைகள் நடைபெறும்.  அன்று மாலை 6.30 மணிக்கு மகர ஜோதி தரிசனம் செய்யப்படும்.  தொடர்ந்து ஜனவரி 19-ம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். ஜனவரி 20-ம் தேதி காலையில் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி தரிசனத்திற்கு பின்னர் கோயில் நடை அடைக்கப்படும்.  அன்றுடன் நடப்பு ஆண்டு மண்டல மகரவிளக்கு சீசன் நிறைவுபெறும்.

நாளை மறுநாள் முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறும். மண்டல பூஜை சமயத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதை போன்று மகரவிளக்கு பூஜைக்கும் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
BakthidevoteesKeralaMakara Lamp PujaNews7Tamilnews7TamilUpdatesSabarimalaiSwamy Ayyappa Temple
Advertisement
Next Article