Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஐபிஎல் தொடருக்காக சென்னை வந்தடைந்தார் 'தல' தோனி!

08:37 PM Mar 05, 2024 IST | Web Editor
Advertisement

ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி சென்னை வந்துள்ளார். 

Advertisement

17ஆவது ஐபிஎல் சீசன் வரும் 22 ஆம் தேதி தொடங்குகிறது. வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியும் மோதுகின்றனஇந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது

இந்நிலையில் போட்டி தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், சிஎஸ்கே அணியின் வீரர்கள் சென்னை வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி சென்னை வந்துள்ளார். தோனி எப்போது சென்னை வருவார்அவரை எப்போது பார்ப்போம் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அவர் சென்னை வந்திருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

முன்னதாக, குஜராத்தின் ஜாம்நகரில் அம்பானி வீட்டின் திருமணத்திற்கு முந்தைய வரவேற்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடந்திருந்தது. அதில் தோனி தனது மனைவி சாக்ஷியுடன் பங்கேற்றிருந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில் அந்த வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்துவிட்டு அங்கிருந்து அப்படியே நேராக சென்னைக்கு வந்து சேர்ந்திருக்கிறார்.

Tags :
Chennaichennai super kingsCricketdhoniIPLIPL 2024MS Dhoni
Advertisement
Next Article