Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வங்கதேச இடைக்கால அரசின் தலைவர்! யார் இந்த முகமது யூனுஸ்?

10:50 AM Aug 07, 2024 IST | Web Editor
Advertisement

வங்கதேசத்தில் இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் கானை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

Advertisement

வங்கதேசத்தில் விடுதலை போரில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலையில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் நாளடைவில் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நிலைமை மோசமானதை அடுத்து அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

இதனையடுத்து அந்நாட்டு நாடாளுமன்றத்தை அதிபர் முகமது ஷஹாபுதீன் கலைத்து உத்தரவிட்டார். மேலும், இடைக்கால அரசு அமைப்பது குறித்து முப்படைகளின் தலைவர்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் குழுக்களின் பிரிதிநிதிகள் கொண்ட 13 பேருடன் நேற்று அந்நாட்டு அதிபர் ஷஹாபுதீன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் கானை இடைக்கால தலைவராக நியமிக்க முடிவு எடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக முகமது யூனுஸ் கான் அதிபர் முகமது ஷஹாபுதீனால் நியமிக்கப்பட்டார்.

யாா் இந்த முகமது யூனுஸ் கான்?

'பரம ஏழைகளுக்கான வங்கியாளர்' என்று அழைக்கப்படும் முகமது கான் யூனிஸ் (83), சமூக தொழிலதிபருமாகவும் பொருளாதார நிபுணராகவும் நாட்டு மக்களிடையே பிரபலமானவர். மிகவும் பின்தங்கிய மக்களுக்கு உதவும் ‘குறுங்கடன்’ (மைக்ரோ-ஃபைனான்ஸ்) முறைக்கு முன்னோடியாக இருந்த ‘கிராமீன் வங்கி’யை நிறுவியதற்காக அவருக்கு கடந்த 2006-ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1984-ஆம் ஆண்டு அவர் தொடங்கிய அந்த வங்கி, சாதாரணமாக மற்ற வங்கிகளிடமிருந்து கடன் பெறத் தகுதியில்லாதவர்களுக்கு கடனுதவி அளித்து வந்தது. இதனால் ஏராளமானவர்கள் வறுமையின் பிடியிலிருந்து வெளியேறியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், யூனிஸ் கானின் வங்கி நடவடிக்கைகள் தொடர்பாக ஷேக் ஹசீனாவின் அரசு கடந்த 2008-இல் பல்வேறு விசாரணைகளை நடத்தியது.

2011-ஆம் ஆண்டில் அவரின் வங்கி நடவடிக்கைளை ஆய்வு செய்த அரசு, அரசின் ஓய்வூதிய நெறிமுறைகளைப் பின்பற்றத் தவறியதாகக் கூறி வங்கியின் நிர்வாக இயக்குநர் பதவியிலிருந்து அவரை அகற்றியது. இது தவிர, அரசின் அனுமதியில்லாமல் நோபல் பரிசு, அவர் எழுதிய புத்தகங்களுக்கான பதிப்புரிமைத் தொகை ஆகியவை உள்பட ஏராளமான தொகையைப் பெற்றதாகவும் முகமது யூனுஸ் கானுக்கு எதிராக கடந்த 2023-ஆம் ஆண்டு ஹசீனா அரசு வழக்கு தொடா்ந்தது.

கிராமீன் வங்கி மூலம் ஏழைகளுக்கு கடன் அளித்தாலும், அதை வசூலிக்க வன்முறை மற்றும் பிற மோசமான வழிமுறைகளைக் கையாண்டதாக யூனிஸ் கான் மீது குற்றஞ்சாட்டிய ஷேக் ஹசீனா, ‘ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சிக் குடிப்பவர்’ என்று விமர்சித்தார். ஷேக் ஹசீனா ஆட்சியின் கொள்கைகளை முகமது யூனுஸ் கானும் மிகக் கடுமையாக எதிர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
BangladeshMohammedShahabuddinMuhammadYunusNobelPeacePrizeSheikhHasina
Advertisement
Next Article