Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம்" - பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள்!

10:23 PM Dec 02, 2023 IST | Web Editor
Advertisement

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம் என பிரேமலதா விஜய்காந்த் தெரிவித்துள்ளார்.

Advertisement

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார்.  கடந்த 18-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு சென்னை நந்தம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மேலும் விஜயகாந்தின் உடல் நிலை, ஏற்றம் இறக்கமாக காணப்படுகிறது எனவும், தொடர்ந்து ஒரு நேரம் போல் மற்றொரு நேரம் அவருடைய உடல் நிலை இல்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சளி அதிகமாக உள்ளதால் சுவாசத்தில் அவ்வப்போது சிரமம் ஏற்படுகிறது என மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விஜயகாந்த உடல்நிலை குறித்து பிரேமலதா விஜய்காந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து தொடர்ந்து வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. அது அனைத்தும் பொய்யான தகவல்கள். விஜயகாந்த் பூரண நலமுடன் உள்ளார், வெகு விரைவில் நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்புவார்.  யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்".

இவ்வாறு பிரேமலதா விஜய்காந்த் தெரிவித்துள்ளார்.

 

Tags :
ChennaiDMDKExplanationHealthhospitalNews7Tamilnews7TamilUpdatesPremalathaVijayakanthrumoursTamilNadutreatmentVideoVijayakanth
Advertisement
Next Article