Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மகாராஷ்டிரா, கர்நாடகாவில் 44 இடங்களில் என்ஐஏ சோதனை!

03:41 PM Dec 09, 2023 IST | Web Editor
Advertisement

கர்நாடகா, மகாராஷ்டிராவில் தேசிய புலனாய்வு அமைப்பினர் இன்று (டிச. 9) அதிகாலையிலேயே அதிரடி சோதனை மேற்கொண்டனர். 44 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

Advertisement

கர்நாடகாவில் சில இடங்களிலும், மகாராஷ்டிராவில் தானே நகரம், தானே கிராமப்புறம், மீரா பயாண்டர் ஆகிய பகுதிகளில் இச்சோதனை நடைபெற்றுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைதானவர்கள் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதக் குழுவின் கோட்பாடுகளை இந்தியாவில் பரப்ப முயற்சித்துள்ளனர் என்று என்ஐஏ குற்றஞ்சாட்டுகிறது. மேலும் அவர்கள் ஐஇடி வெடிப்பொருட்களை தயாரிப்பதிலும் ஈடுபட்டதாகத் தெரிகிறது. நாட்டின் பயங்கரவாத சதிச் செயல்களில் ஈடுபடவிருந்ததால் அவர்களில் 13 பேர் கைது செய்யப்பட்டனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags :
KarnatakaMaharashtraNews7Tamilnews7TamilUpdatesNIARaid
Advertisement
Next Article