Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தேசிய விருது வாங்கிய பின் நித்யா மேனன் கொடுத்த புது அப்டேட்!

10:00 PM Oct 08, 2024 IST | Web Editor
Advertisement

தேசிய விருது வாங்கிய பின் நடிகை நித்யா மேனன் தான் அடுத்தடுத்து நடித்துவரும் புதுப்படங்களில் சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

கன்னட படத்தின் மூலம் 2006-இல் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நித்யா. அதன்பின், தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகர்களுடன் நடித்து தனக்கான தனி இடத்தைப் பிடித்துள்ளார். குறிப்பாக, தமிழில் அவர் நடிப்பில் வெளியான, ‘காஞ்சனா - 2’, ‘ஒகே கண்மணி’, ‘மெர்சல்’, ‘திருச்சிற்றம்பலம்’ ஆகியவை அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தன. தனுஷ் இயக்கத்தில் இறுதியாக வெளியான ராயன் திரைப்படம் விமர்சனங்களைச் சந்தித்தாலும், ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. தொடர்ந்து, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி வருகிறார். தற்போது, தனுஷ் இயக்கும் 4-வது படமான இட்லி கடை படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை நடிகர் தனுஷ் இயக்கி, நடிக்கிறார். ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், நித்யா மேனன், ஷாலினி பாண்டே நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.

Advertisement

இந்நிலையில் நடிகை நித்யா மேனன் அதை உறுதிப்படுத்தியுள்ளார். தேசிய விருது பெற்ற பின் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த நித்யா மேனன், தேசிய விருதுக்கு காரணம் முன்தயாரிப்புகள் கிடையாது. கதாபாத்திரத்தைப் புரிந்து கொள்வதும் இயற்கையாக இருப்பதும்தான். முதல்முறையாக விருது வாங்கியதால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் இதுவரை நடித்ததற்கான ஒரு அதிகாரபூர்வ அங்கீகாரமாக பார்க்கிறேன். ஒரு கலைஞராக இந்த விருது முக்கியமானது. இந்த விருதினை எனது படக்குழுவுக்கும் சமர்பிக்கிறேன்.

நான், தற்போது பல படங்களில் நடித்து வருகிறேன். அடுத்து மீண்டும் தனுஷ் உடனும் நடிக்கிறேன். தனுஷுடன் நடித்த இந்தப் படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. அதனால் அடுத்தப் படம் குறித்தும் மிகவும் ஆவலுடன் இருக்கிறேன் என்றார்.

Tags :
70th National Awardnews7 tamilNithya Menen
Advertisement
Next Article