Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘#Vettaiyan’-க்கு புதிய சிக்கல்...திரைப்படத்திற்கு தடைவிதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு!

11:39 AM Oct 03, 2024 IST | Web Editor
Advertisement

வேட்டையன் திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

ஜெய்பீம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வேட்டையன்’. இதில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படம் அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ‘மனசிலாயோ, ஹண்டர் வண்டார்’ போன்ற பாடல்கள் தற்போதுவரை ட்ரெண்டிங்கில் உள்ளது. இப்படத்திற்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் நேற்று மாலை வெளியானது. இந்நிலையில் வேட்டையன் படத்திற்கு தடை விதிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

“வேட்டையன் படத்தில் இடம்பெற்றுள்ள என்கவுன்ட்டர் தொடர்பான வசனங்களை நீக்க வேண்டும். அதுவரை வேட்டையன் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் “ என மதுரையைச் சேர்ந்த பழனிவேலு என்பவர் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

Tags :
Lyca ProductionsPetitionRajinikanthTrailerVettaiyan
Advertisement
Next Article