Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேச பிரபுவின் பெற்றோர்களை சந்தித்து மருத்துவ செலவுக்கான நிவாரணத்தை வழங்கினார் அமைச்சர் சாமிநாதன்..!

09:21 PM Jan 25, 2024 IST | Web Editor
Advertisement

நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேசபிரபுவின் பெற்றோர்களை மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் சந்தித்து தமிழ்நாடு அரசு அறிவித்த காசோலையை நேரில் வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.

Advertisement

நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா செய்தியாளராக பணியாற்றி வருபவர் நேசபிரபு.  இவர் நேற்று செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போதும், மற்ற நேரங்களில் மர்ம நபர்கள் சிலர் நோட்டம் விட்டுள்ளனர். இவரைப் பற்றிய தகவல்களையும் விசாரித்துள்ளனர்.

தன்னை நோட்டம் விடும் மர்ம நபர்கள் குறித்து காவல்துறைக்கு நேசபிரபு தகவல் தெரிவித்துள்ளார். தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினரிடம் கூறிய நேசபிரபுவிடம், நேரில் வந்து புகார் அளிக்கும்படியும், போதிய காவலர்கள் இல்லை என்றும் அலட்சியம் காட்டியுள்ளனர்.

இதையும் படியுங்கள் ;“கொலைவெறி தாக்குதல் சம்பவத்தில் FIR பதிவு செய்ய வேண்டும்” – திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நியூஸ் 7 தமிழ் நிர்வாக ஆசிரியர் நேரில் வலியுறுத்தல்.!

இதையடுத்து மீண்டும் மர்ம நபர்கள் பின்தொடர பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதிக்குச் சென்று மீண்டும் மீண்டும் காவல்துறையினரின் உதவியை நேசபிரபு கேட்டுள்ளார். அவ்வாறு காவல்துறையினரிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே, 5 கார்களில் வந்த மர்ம கும்பல் நேசபிரபுவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.

இதனால் கை, கால், முகம் என உடலின் பல்வேறு பகுதிகளில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்த நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபுவை, தகவலறிந்து வந்த காவல்துறையினர் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து கோவை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

செய்தியாளர் நேசபிரபு தாக்கப்பட்டதை அறிந்த நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும் மெத்தனப்போக்கில் செயல்பட்ட காவல்துறையினர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

முன்னதாக, திருப்பூர் மாவட்டம் பல்லடம் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மர்ம நபர்களால் தாக்கப்பட்டு கோவை கங்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் நேரில் பார்வையிட்டு செய்தியாளர் நேச பிரபுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தமிழ்நாடு அரசு அறிவித்த மூன்று லட்ச ரூபாய்க்கான காசோலையை மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன், மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் , எஸ்பி சாமிநாதன் ஆகியோர் நேச பிரபுவின் இல்லத்தில் அவர்களது பெற்றோர்களை சந்தித்து நேரில் வழங்கி ஆறுதல் தெரிவித்தனர்.

Tags :
AttackCMOTamilNadujournalistNesaPrabhupalladamReporterThirupurcitypolTiruppurTNGovttnpoliceofflTPRDtCollector
Advertisement
Next Article