Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

" நியூஸ் 7 தமிழ் செய்தியாளரை தாக்கிய சமூக விரோதிகளை விரைந்து கண்டறிந்து சட்டத்தின் அடிப்படையில் கடும் தண்டனைக்குட்படுத்த வேண்டும்" - நவாஸ்கனி எம்பி

08:10 PM Jan 25, 2024 IST | Web Editor
Advertisement

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீதான தாக்குதலுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவரும், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான கே. நவாஸ்கனி  கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா செய்தியாளராக பணியாற்றி வருபவர் நேசபிரபு.  இவர் நேற்று செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போதும், மற்ற நேரங்களில் மர்ம நபர்கள் சிலர் நோட்டம் விட்டுள்ளனர். இவரைப் பற்றிய தகவல்களையும் விசாரித்துள்ளனர்.

தன்னை நோட்டம் விடும் மர்ம நபர்கள் குறித்து காவல்துறைக்கு நேசபிரபு தகவல் தெரிவித்துள்ளார். தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினரிடம் கூறிய நேசபிரபுவிடம், நேரில் வந்து புகார் அளிக்கும்படியும், போதிய காவலர்கள் இல்லை என்றும் அலட்சியம் காட்டியுள்ளனர்.

இதையும் படியுங்கள் ; நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபுவுக்கு அறுவை சிகிச்சை நிறைவு – ICUக்கு மாற்றம்!

இதையடுத்து மீண்டும் மர்ம நபர்கள் பின்தொடர பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதிக்குச் சென்று மீண்டும் மீண்டும் காவல்துறையினரின் உதவியை நேசபிரபு கேட்டுள்ளார். அவ்வாறு காவல்துறையினரிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே, 5 கார்களில் வந்த மர்ம கும்பல் நேசபிரபுவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.

இதனால் கை, கால், முகம் என உடலின் பல்வேறு பகுதிகளில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்த நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபுவை, தகவலறிந்து வந்த காவல்துறையினர் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து கோவை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

செய்தியாளர் நேசபிரபு தாக்கப்பட்டதை அறிந்த நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும் மெத்தனப்போக்கில் செயல்பட்ட காவல்துறையினர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர் நேசப்பிரபு மீதான தாக்குதலுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவரும், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான கே நவாஸ்கனி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது,

"நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியின் பல்லடம் செய்தியாளர் நேச பிரபு தாக்கப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சார்ந்த நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியின் செய்தியாளர்  நேச பிரபு அடையாளம் தெரியாத சமூக விரோதிகளால் கொலை வெறி தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இக்கொடும் சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோதிகளை விரைந்து கண்டறிந்து சட்டத்தின் அடிப்படையில் கடும் தண்டனைக்குட்படுத்த வேண்டும். நேச பிரபு உள்ளிட்ட பத்திரிகையாளர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். நேச பிரபு விரைந்து குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்"

இவ்வாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவரும், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான கே நவாஸ்கனி தெரிவித்துள்ளார்.

Tags :
AttackCMOTamilNadujournalistNesaPrabhupalladamReporterThirupurcitypolTiruppurTNGovttnpoliceofflTPRDtCollector
Advertisement
Next Article