Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இரவு 8 மணி நிலவரம்: இயல்பு நிலைக்கு திரும்பும் நெல்லை மாநகர் பகுதிகள்!

09:42 PM Dec 18, 2023 IST | Web Editor
Advertisement

திருநெல்வேலி மாநகர் பகுதிகளில் மழையின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. மார்க்கெட் பகுதியில் மக்கள் சகஜமாக கடைகளில் பொருட்களை வாங்குதை காண முடிகிறது. பெரும் பகுதிக்கு பேருந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் திருநெல்வேலி,  தூத்துக்குடி,  தென்காசி,  கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.  மழைநீர் தேக்கம் மற்றும் அதி கனமழை காரணமாக நெல்லையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.  பல்வேறு பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து செல்லும் பகல் நேர ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

திருநெல்வேலியில் பேருந்து நிலையத்தில் இருந்து சிந்துபூந்துறை செல்லும் சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதிகள், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடி வருவதால் மாவட்டம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாநகர் பகுதிகளில் இரவு 8 மணி நிலவரப்படி மழையின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. தாமிரபரணி நதியில் நீர்வரத்து சற்று குறைந்துள்ளது. காலை போல் அல்லாமல் நீர்போக்கு சற்று குறைந்துள்ளதாக காண முடிகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று தீயணைப்பு துறையினரும் முகாமிட்டுள்ளனர்.

மின்சாரத்தை பொறுத்தவரை, பாளையங்கோட்டை, முருகன் குறிச்சி மற்றும் வண்ணாரப்பேட்டை ரவுண்டானா பகுதிகளில் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. வணிக கடைகளை பொறுத்தவரை பாளை பேருந்து நிலையம், முருகன் குறிச்சி மற்றும் மார்க்கெட் பகுதிகளில் மருந்தகங்கள், உணவகங்கள் மற்றும் இதர கடைகள் அனைத்தும் இயங்குகின்றன. மார்க்கெட் பகுதியில் மக்கள் சகஜமாக கடைகளில் பொருட்களை வாங்குதை காண முடிகிறது.

பேருந்து போக்குவரத்தை பொறுத்தவரை, நெல்லை புதிய பேருந்து நிலையத்திலிருந்து மதுரை மற்றும் மாநகர் பகுதிகளில் வண்ணாரப்பேட்டை வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகிறது. கிராமப் பகுதிகளுக்கு இயக்கக்கூடிய பேருந்துகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

திருநெல்வேலி முதல் திருச்செந்தூர் வரை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.  திருநெல்வேலி முதல் தூத்துக்குடி வரை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருநெல்வேலி முதல் தென்காசி வரை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

Tags :
Heavy rainfallheavy rainsKanyakumari RainsNellaiNellai FloodsNews7Tamilnews7TamilUpdatesrain alertrainfallSouth TN RainsTamilnadu RainsTenkasi RainsThoothukudiThoothukudi RainsTirunelveli Rains
Advertisement
Next Article