Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நீடா அம்பானி பற்றி மருமகள் ராதிகா மெர்ச்சண்ட் சொன்ன வார்த்தை! இணையத்தில் வைரல்!

04:43 PM Jul 15, 2024 IST | Web Editor
Advertisement

“எங்கள் கல்யாணத்தின் சிஇஓ நீடா அம்பானி தான்” என ஆனந்த் அம்பானியின் மனைவியான ராதிகா மெர்ச்சண்ட் தெரிவித்துள்ளார். 

Advertisement

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆன்ந்த அம்பானியின்  திருமணம் ஜூலை 12 ஆம் தேதியன்று மும்பையில் நடைபெற்றது. கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், திருமணத்துக்கு முந்தைய வைபவங்களும்,  கொண்டாட்டங்களும் கடந்த சில மாதங்களாகவே நடந்து வந்தது.

மும்பை பிகேசியில் உள்ள அம்பானி குடும்பத்துக்கு சொந்தமான ஜியோ வேர்ல்டு டிரைவ் கன்வென்சன் அரங்கில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நடந்தது.
திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கிரிக்கெட் வீரர் டோனி, ஹாலிவுட் நடிகர் ஜான் சீனா, ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த திருமணத்தில் துணை மாப்பிளைகளுக்கு ரூ. 2 கோடி மதிப்பிலான வாட்ச்சும் பரிசாக வழங்கப்பட்டது. இந்நிலையில் திருமணத்தின் சிஇஓவாக செயல்பட்டவர் தனது மாமியாரான நீடா அம்பானிதான் என அமெரிக்கா லைஃப் ஸ்டைல் இதழிடம் ராதிகா மெர்ச்சண்ட் தெரிவித்துள்ளார். மேலும், “அவரின் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்பு எங்கள் கொண்டாட்டத்திற்கு முக்கிய காரணமாக இருந்தது.

எங்கள் திருமணத்திற்கான திட்டமிடல் அனைத்தையும் இஷா அம்பானியும், ஸ்லோகா மேத்தாவும்வும் தான் மேற்கொண்டனர்.  திருணத்திற்கான பல வார கொண்டாட்டத்தை சரியாக வழிநடத்த ஒவ்வொரு பணிக்கும்,  ஒரு குழுவை நியமித்தனர் என் குடும்பத்தினர். எங்கள் குடும்ப பூசாரியின் ஆலோசனைபடி ஜூலை 12, 13, 14 ஆகிய தேதிகளில் கொண்டாட்டங்கள் நிச்சயிக்கப்பட்டன” என தெரிவித்துள்ளார்.

Tags :
| radhika merchantAnand Ambaninita ambaniWedding
Advertisement
Next Article