நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் கைது!
10:08 AM Jul 11, 2024 IST
|
Web Editor
Tags :
Advertisement
நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு உள்ளார்.
Advertisement
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பரப்புரையின் போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட சாட்டை துரைமுருகன், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறான கருத்துக்களை பேசியதாக அவர் மீது திமுகவினர் புகார் அளித்திருந்தனர்.
இது குறித்து திருச்சி சைபர் கிரைம் போலீசாரிடம் திமுக தரப்பில் புகார் அளிக்கப்படவே, வழக்குப்பதிவு செய்த போலீசார் தற்போது சாட்டை துரைமுருகனை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நெல்லை, குற்றாலம் வீராணம் பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த சட்டை துரைமுருகனை திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே இது போன்ற ஒரு சர்ச்சையில் சிக்கிய சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Next Article