Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

என் இதயம் மகிழ்ச்சியில் துடிக்கிறது..! - ரஜினிகாந்த் நெகிழ்ச்சி

05:28 PM Oct 25, 2023 IST | Jeni
Advertisement

நடிகர் அமிதாப் பச்சனுடன் மீண்டும் பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Advertisement

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. பாக்ஸ் ஆஃபிஸிலும் கெத்து காட்டிய இத்திரைப்படம் நடிகர் ரஜினிகாந்த்-க்கு புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது. ஜெயிலர் படத்தை தொடர்ந்து த.செ.ஞானவேல் இயக்கும் ‘தலைவர் 170’ படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

இத்திரைப்படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா, ஃபகத் ஃபாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். கடந்த 1991 ஆம் ஆண்டில் வெளியான ‘ஹம்’ படத்தில் கடைசியாக ரஜினியும் அமிதாப் பச்சனும் இணைந்து நடித்திருந்தனர். தற்போது 33 ஆண்டுகளுக்கு பின் ரஜினியும் அமிதாப்பும் இணைந்து நடிக்கவுள்ளனர்.

இதையும் படியுங்கள் : இஸ்ரேல் தூதருடன் நடிகை கங்கனா ரனாவத் சந்திப்பு...!

இந்நிலையில் அமிதாப் பச்சனுடன் நடிப்பது குறித்து தனது X தள பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சிப் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர்,  “33 ஆண்டுகளுக்குப் பிறகு, த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளிவர உள்ள "தலைவர் 170" படத்தில் எனது வழிகாட்டியான அமிதாப் பச்சனுடன் மீண்டும் பணியாற்றுகிறேன். என் இதயம் மகிழ்ச்சியில் துடிக்கிறது!” என்று பதிவிட்டுள்ளார்.

Tags :
AmitabhBachchanCelebritycinemamovieRajinikanthThalaivar170tweet
Advertisement
Next Article