Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

IPL 2024 : சேப்பாக்கத்தில் வலை பயிற்சியை துவங்கிய தோனி!

10:31 AM Mar 10, 2024 IST | Web Editor
Advertisement

சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிக்கான பயிற்சியில் தல தோனி ஈடுபட்டுள்ளார்.

Advertisement

17ஆவது ஐபிஎல் சீசன் வரும் 22 ஆம் தேதி தொடங்குகிறது. வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியும் மோதுகின்றனஇந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது

இதையும் படியுங்கள் : இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம் – எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 22 தமிழ்நாடு மீனவர்கள் கைது!

இந்நிலையில் போட்டி தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், சிஎஸ்கே அணியின் வீரர்கள் சென்னை வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி சென்னை வந்துள்ளார். தோனி எப்போது சென்னை வருவார்அவரை எப்போது பார்ப்போம் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அவர் சென்னை வந்திருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
முன்னதாக, குஜராத்தின் ஜாம்நகரில் அம்பானி வீட்டின் திருமணத்திற்கு முந்தைய வரவேற்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடந்திருந்தது. அதில் தோனி தனது மனைவி சாக்ஷியுடன் பங்கேற்றிருந்த வீடியோ இணையத்தில் வைரலானது. அந்த வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்ட பிறகு மார்ச் 05 ஆம் தேதி சென்னைக்கு வந்தடைந்தார். இந்நிலையில், 2024 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான தீவிர பயிற்சியில் தோனி ஈடுபட்டுள்ளார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ள தோனியின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Tags :
ChennaichennaisuperkingsdhoniIPLIPL2024MSdhoni
Advertisement
Next Article