Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கேரள திரையுலகில் புயலை கிளப்பிய ‘ஹேமா கமிட்டி அறிக்கை’! #AMMA தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார் #Mohanlal!

04:09 PM Aug 27, 2024 IST | Web Editor
Advertisement

கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி நடிகைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் குறித்த புகார்கள் பூதாகரமாகி வரும் நிலையில், மலையாள நடிகர்கள் சங்கமான ‘அம்மா’ - ன் தலைவர் பதவியை மோகன்லால் ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து அந்த அமைப்பே கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது. 

Advertisement

கேரளாவில் ஓடும் வாகனத்தில் நடிகை ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை அடுத்து, இந்த வழக்கில் நடிகர் திலீப் தற்போது விசாரணையை எதிர்கொண்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக சினிமா துறையில் எழுந்த பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க ஹேமா கமிஷன் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், மலையாள சினிமாவில் திரைமறைவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல்ரீதியான அத்துமீறல்கள் குறித்து விசாரணை நடத்திய ஹேமா கமிஷன் அறிக்கை 2019-ம் ஆண்டு கேரள அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் வெளியானது. அதில் நடிகைகள் வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்துகொள்ளும் நிலை இருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. நடிகைகள் மற்றும் பெண்களுக்காகத் தனியாக டாய்லெட் வசதியோ, உடை மாற்றும் வசதியோ இல்லை என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. மேலும், அந்த அறிக்கையில் சினிமா துறை குறித்த அதிர்ச்சிகரமான சில தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

இந்நிலையில், ஹேமா கமிஷன் அறிக்கை அரசியல்ரீதியாகவும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சினிமா துறையில் பெண்களுக்கு எதிரான வக்கிரங்கள் நடந்தது 2019-ம் ஆண்டே ஹேமா கமிஷன் அறிக்கை மூலம் ஆதாரபூர்வமாகக் கிடைத்தும், கடந்த நான்கரை ஆண்டுகளாக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சியான காங்கிரஸ் கேள்வி எழுப்பியது.

தொடர்ச்சியாக, இப்பிரச்னை பூதாகரமான நிலையில், நடிகர்கள் மீது அடுத்தடுத்து குவியும் பாலியல் பலாத்கார புகார்கள் மலையாள நடிகர் சங்கத்திற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதற்கு நடுவில் நடிகைகள் ஒவ்வொருவராக, நடிகர்கள் தங்களுக்கு தந்த பாலியல் தொல்லைகளை அம்பலப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, மலையாள நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ், மணியம்பிள்ளை ராஜூ, நடிகர் இடவேள பாபு ஆகியோர் மீது நடிகை மினு முனீர் பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார்.இதன் தொடர்ச்சியாக டைரக்டர் ரஞ்சித், நடிகர் சித்திக் ஆகியோர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்ட நிலையில், அவர்கள் தங்கள் சங்க பொறுப்புகளையும் ராஜினாமா செய்துள்ளனர்.

இந்நிலையில், மலையாள நடிகர்கள் சங்க அவசர செயற்குழு கூட்டம் இன்று (27.08.2024) கொச்சியில் நடந்தது. இதில், தலைவர் பதவியை நடிகர் மோகன்லால் ராஜினாமா செய்தார். அத்துடன், செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கூட்டாக ராஜினாமா செய்ததாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

மலையாள திரையுலகின் மூத்த நடிகர்களான மோகன்லால், மம்முட்டி போன்றவர்கள் எந்தவொரு கருத்துக்களையும் தற்போது வரை தெரிவிக்கவில்லை என்று ஏற்கனவே பிரித்விராஜ் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்திருந்த நிலையில், இந்த அம்மா சங்கத்தில் இப்படியொரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது கேரள திரையுலகில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Actor DileepJustice Hema Committee reportMalayalam film industryMohanlalnews7 tamilNews7 Tamil UpdatesSexual assaultSexual harassment
Advertisement
Next Article