Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மெத்தம்பெட்டமைன் போதை பொருள் பறிமுதல்! ராமநாதபுரத்தை சேர்ந்தவர் உள்பட 3 பேர் கைது!

05:56 PM Jul 29, 2024 IST | Web Editor
Advertisement

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சுமார் 7 கிலோ மெத்தம்பெட்டமைன் போதை பொருள் மற்றும் ஏழு லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

நாடு முழுவதும் போதை நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், ஆங்காங்கே போதை பொருள்கள் பறிமுதல் செய்யப்படும் செய்தி அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளன.

இதன் தொடர்ச்சியாக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வைத்து ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரிடம் இருந்து 24.07.2024 அன்று 5.970 கிலோ மெத்தாம்பெட்டமைனை போதைப்பொருள் தடுப்புப் பிரிவை சேர்ந்த சென்னை போலீசார் மீட்டிருக்கின்றனர். இதனை அடுத்து இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ரெட்ஹில்ஸ் பகுதிக்கு அருகே போதைப் பொருள்களை பதுக்கி வைக்க பயன்படுத்திய குடோன் இருப்பது தெரியவந்தது. பின்னர் 27.07.2024 அன்று போதைப்பொருள் தடுப்புப் பிரிவு குழு குடோனில் சோதனை நடத்தி 954 கிராம் மெத்தம்பேட்டமைன் மற்றும் 7 லட்ச ரூபாய் ஆகியவற்றை மீட்டனர்.

அடுத்தடுத்த விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்திருப்பதாக போதை பொருள் தடுப்புப் பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
arrestedChennaicriminalDrugsKilambakkamNarcotics Control Bureaunews7 tamilNews7 Tamil UpdatesseizedTamilNadu
Advertisement
Next Article