Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மன்னிப்பு கேட்ட மன்சூர் அலிகான்... நடிகை த்ரிஷாவிடம் விசாரணை நடத்த காவல்துறை முடிவு!

09:49 AM Nov 25, 2023 IST | Web Editor
Advertisement

நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்ட நிலையில் நடிகை த்ரிஷாவிடம் விசாரணை நடத்த காவல்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

நடிகர் மன்சூர் அலிகான் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில்,  நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதற்கு நடிகர் த்ரிஷா கண்டனம் தெரிவித்ததை அடுத்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகை மாளவிகா மோகனன், குஷ்பு உள்ளிட்ட பலர் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து நடிகர் மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகும்படி மன்சூர் அலிகானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி நடிகர் மன்சூர் அலிகான், ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் ஆஜரானார்.

மேலும் நேற்று நடிகை த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு நடிகர் மன்சூல் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “திரிஷாவின் மனது வருத்தப்பட்டிருக்கிறது என காவல் அதிகாரி அம்மையார் சொல்ல, ‘ஐயஹோ எனக்கும் வருத்தம் தான்’ என வந்து விட்டேன். எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு! இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம் வரும் போது நான் ஆசீர்வதிக்கும் பாக்யத்தை இறைவன் தந்தருள்வானாக… ஆமீன்…” என்று கூறியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து நடிகர் மன்சூர் அலிகானின் மன்னிப்பிற்கு பதிலளிக்கும் விதமாக நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தள பக்கத்தில்,  “தவறு செய்வது மனிதம்... மன்னிப்பது தெய்வீகம்…” என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் நடிகை த்ரிஷாவிடம் விசாரணை நடத்த காவல்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.  காவல்துறை விசாரணையின் போது நடிகை த்ரிஷா அளிக்கும் பதில்களின் அடிப்படையிலும்,  சட்ட நிபுணர்களின் ஆலோசனைக்கு பின்னும் இந்த வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை  தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
apologycinemacontroversyMansoor AliKhanmovieNews7Tamilnews7TamilUpdatesTrisha
Advertisement
Next Article