Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

முழு கொள்ளளவை எட்டிய மணிமுத்தாறு அணை - 1,000 கன அடி நீர் திறப்பு!

11:43 AM Dec 24, 2023 IST | Web Editor
Advertisement

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அணை 19 வது முறையாக அதனை முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

Advertisement

தென் மாவட்டங்களில் மிகப்பெரிய அணையான திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அணை 19 வது முறையாக அதனை முழு கொள்ளளவை எட்டி உள்ளது. 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணை முழு கொள்ளளவை எட்டி கடல் போல் காட்சியளிக்கிறது. 5.5 டி.எம்.சி தண்ணீர் உள்ளடக்கத்தை கொண்ட மணிமுத்தாறு அணை தென் மாவட்டங்களில் வாழ்வாதாரமாக திகழ்கிறது.

இதையும் படியுங்கள் : 142 அடியை நெருங்கிய முல்லைப் பெரியாறு அணை..!! -கேரள பகுதிக்கு 2ம் வெள்ள அபாய எச்சரிக்கை…

வரும் நாட்களில் தொடர்ந்து மழை நீடித்தால் அணைக்கான நீர் வரத்து அப்படியே
உபரியாக தாமிரபரணி ஆற்றில் திறக்கப்பட உள்ளது. அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் தற்போது 1300 கன அடி தண்ணீர் உபரியாக பிரதான ஷட்டர் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அணை கட்டப்பட்டதிலிருந்து 1971 ஆம் ஆண்டு அதிகபட்சமாக அணையில் இருந்து ஒரே நாளில் சுமார் 50,000 கன அடி தண்ணீர் வீதம் வெளியேற்றப்பட்டுள்ளது. இந்த நீர் மழைக்காலத்தில் தாமிரபரணியில் கலந்து வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்க அப்போதைய தமிழக முதலமைச்சர் காமராசரால் கொண்டு வரப்பட்ட அணைத் திட்டம். இந்த அணை சிங்கம்பட்டி அருகே 1958 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த அணையில் 118 அடிவரை நீரைத் தேக்க முடியும் என்பது குறிப்பிடதக்கது.

Tags :
full capacityHeavyRainManimutthar damNellaiRainreachesSouthernTamilNaduTirunelveliTNRainswater release
Advertisement
Next Article