Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Thangalanல் ஆரத்திக்கு கிடைத்த வரவேற்பு.. மகிழ்ச்சியில் மாளவிகா மோகனன்!

08:04 PM Aug 23, 2024 IST | Web Editor
Advertisement

தங்கலானில் தனது கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பு குறித்து மாளவிகா மோகனன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் விக்ரம். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் வெளிவந்த வரவேற்பையும், வசூலையும் பெற்று தந்து இருக்கிறது. அந்த வகையில் இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் படம் தான் தங்கலான்.

இந்த படத்தை பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியிருக்கிறார். கேஜிஎஃப்பில் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் படம் மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் என பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் இசை அமைத்து இருக்கிறார்.

மேலும், இந்த படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் பிரபலங்கள் பலருமே தங்கலான் படத்தை பார்த்து பாராட்டி வருகிறார்கள். இந்த திரைப்படத்தில் விக்ரமுக்கு அடுத்து மாளவிகா மோகனனின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். தமிழில் அவர் நடித்த படங்களிலேயே தங்கலான் தான் அவரின் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும் பலர் எழுதியுள்ளனர்.

இந்த நிலையில் தங்கலான் படத்தின் வெற்றி குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ள மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளதாவது..

“ கொளுத்தும் வெயிலில் 10 மணி நேரம் படப்பிடிப்பு, எருமையில் சவாரி செய்தது, சிங்கிள் ஷாட் சண்டை காட்சிகள், எரியும் பாறையில் நின்றது என வேறு எந்த படத்திற்க இந்த அளவிற்கு உழைத்ததில்லை. ஆனால் தற்போது அந்த கதாபாத்திரம் ரசிகர்களால் கொண்டாடப்படுவது நெகிழ்ச்சியை தருகிறது ” என மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.

Tags :
AArathiMalavika mohananthangalanthangalan update
Advertisement
Next Article