Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பராமரிப்பு பணிகள் : இன்று 3 மணி வரை புறநகர் ரயில் சேவைகள் ரத்து!

11:38 AM Feb 18, 2024 IST | Web Editor
Advertisement

பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை தாம்பரம் இடையே இன்று பிற்பகல் 3 மணி வரை 44 புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Advertisement

கோடம்பாக்கம் மற்றும் தாம்பரம் ரயில் நிலையத்திற்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக கடற்கரையில் இருந்து தாம்பரம் ரயில் நிலையம் வரை இயக்கப்படும் 44 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை 44 ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  பயணிகளின் வசதிக்காக தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மெட்ரோ ரயில்நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிடங்களுக்கு ஒரு முறை ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது மேலும், ஞாயிறு அட்டவணைப்படி ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

Advertisement
Next Article