Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடிக்கிறது மகாயுதி கூட்டணி - பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றது!

12:02 PM Nov 23, 2024 IST | Web Editor
Advertisement

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெற்று முன்னிலையில் உள்ளது.

Advertisement

288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ஒரேகட்டமாக நவ.20ம் தேதி தேர்தல் நடைபெற்றது. பாஜக – ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா – அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஒன்றிணைந்து மகாயுதி எனும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன. மறுபுறம் எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே அணி சிவசேனா, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசின் ஒன்றிணைந்து மகா விகாஸ் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன. இந்த தேர்தலில் 65.11% வாக்குகள் பதிவாகின.

ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மாநிலங்களுக்கான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் இரு மாநிலங்களிலும் பாஜக தலைமையிலான கூட்டணியே பெரும்பான்மையான இடங்களைப் பெறும் என தெரிவிக்கப்பட்டது. இதேபோல வயநாடு இடைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் காலை 12மணி நிலவரப்படி மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணி பின்னடைவை சந்திதுள்ளது.

முன்னிலை நிலவரம் :

Tags :
devendra fadnavisEknath ShindeElectionMaharashtraMaharashtra Assemblyresult
Advertisement
Next Article