Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மகாராஜாவை அடுத்து மகாராணி? | விரைவில் வெளியாகும் நிதிலனின் அடுத்த பட அப்டேட்!

02:38 PM Oct 09, 2024 IST | Web Editor
Advertisement

நிதிலன் சுவாமிநாதன் நயன்தாராவை வைத்து இயக்கவுள்ள புதிய திரைப்படத்திற்கான திரைக்கதை வேலைகளில் ஈடுப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன், நடிகர் விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய திரைப்படம் மகாராஜா. இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்தனர். இத்திரைப்படம் கடந்த ஜூன் 14-ம் தேதி வெளியானது. வெளியான முதல் நாளிலிருந்தே மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது.

விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு, கதாநாயகனாக விஜய் சேதுபதிக்கும் ஒரு நல்ல கம்பேக் திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தின் வசூல் ரூ.100 கோடியை தாண்டியது. இதனைத் தொடர்ந்து, இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன் அடுத்ததாக யாரை வைத்து படம் உருவாக்க உள்ளார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரின் அடுத்த படம் தொடர்பான அப்டேட் வெளியானது.

அதன்படி, இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவை வைத்து படம் இயக்க உள்ளதாத தகவல் வெளியானது. இப்படத்திற்கு மகாராணி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இயக்குநர் நித்திலன் தன் குழுவினருடன் இப்படத்திற்கான திரைக்கதை வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
MaharajanayantharaNithilan Swaminathantamil cinemaVijay sethupathi
Advertisement
Next Article