Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மதுரை காமராஜர் பல்கலை. பெண்கள் விடுதி அருகே மின்கம்பத்தில் திடீர் தீ விபத்து - மூச்சு திணறலால் 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

09:46 AM Nov 04, 2023 IST | Student Reporter
Advertisement
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் மின்கம்பத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் 4 பெண்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில்,  மதுரையில் கனமழை பெய்து வருகிறது.  இந்நிலையில் இரவிலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய கனமழை பெய்ததையடுத்து மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழக பகுதியில் பெய்த மழையின் காரணமாக பல்கலைக்கழக பெண்கள் விடுதி அருகே இருந்த மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

Advertisement

தீயானது கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியதால், விடுதி மாணவிகள் அதிர்ச்சிக்குள்ளாகி அங்கிருந்த நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.  மேலும் சில விடுதி மாணவிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படவே தீயணைப்புத் துறையினருக்கும், 108 ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரிவித்தனர்.

பின்னர் தகவல் அறிந்து வந்த மதுரை பெரியார் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய 2 தீயணைப்பு நிலையங்களில் இருந்து, 2 வாகனங்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.  மேலும் மழை என்பதால் தீ தானாகவே அணைந்த நிலையில்,  பல்கலைக்கழக மாணவர் விடுதி வளாகம் முழுவதும் புகை மூட்டத்துடன் காணப்பட்டது.  இதனால் 4 மாணவிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு அருகில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனையில் அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

Tags :
4 students injuredfire accident issuefire department officersGirls hostelin Madurai districtMadurai Kamarajar Universitynagamalai policePolice Investigation
Advertisement
Next Article