Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆதரவாளர் வீட்டில் சிபிசிஐடி சோதனை!

10:52 AM Jul 11, 2024 IST | Web Editor
Advertisement

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் உறவினர்களின் வீடு மற்றும் ஆதரவாளர்களிடம் இரண்டாவது நாளாக சிபிசிஐடி போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

கரூரை அடுத்த வாங்கல் குப்புச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர், கடந்த மாதம் 25 ஆம் தேதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி சேகர் உள்பட மூன்று பேர் சேர்ந்து தனது ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து அபகரித்து விட்டதாக கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதனையடுத்து இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் எனக் கூறி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவரது தம்பி சேகர் ஆகியோர் கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கானது சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே அவர் தலைமறைவானார்.

இதையடுத்து கரூர் மாவட்ட சிபிசிஐடி போலீசார் 8 தனிப்படைகள் அமைத்து தலைமறைவான முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி உள்ளிட்டோரை தேடி வருகின்றனர். இதற்காக கடந்த வாரம் அவரது வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர். அதே போல விஜயபாஸ்கர் ஆதரவாளர்களான வேலாயுதம்பாளையம் செல்வராஜ், கவுண்டம்பாளையம் ரகு, ஈஸ்வரமூர்த்தி ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.

இந்தநிலையில், கரூர் ஆண்டாங்கோயில் மேற்கு ஊராட்சிஅம்மன் நகரில் உள்ள விஜயபாஸ்கர் ஆதரவாளரும், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு அணியின் நிர்வாகியுமான கவின் வீட்டில் சிபிசிஐடி போலீசார் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கவின் வீட்டில் இல்லாததால், அவரது தந்தையிடம் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags :
ADMKCBCIDinvestigationMR Vijayabaskar
Advertisement
Next Article