Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“அந்த படத்தால் சூர்யா மீதான அன்பு அதிகரித்தது” - #Kerala காங்கிரஸின் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா!

10:34 AM Oct 23, 2024 IST | Web Editor
Advertisement

கேரள காங்கிரஸின் மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான ரமேஷ் சென்னித்தலா நடிகர் சூர்யாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது;

Advertisement

“ஜெய் பீம் என்ற ஒற்றை படம் போதும். நடிகர் சூர்யாவின் அர்ப்பணிப்பையும், சமூக உணர்வையும் மாற்ற. அந்தப் படத்தை பார்த்த பிறகுதான் சூர்யா மீதான எனது அன்பு மேலும் அதிகரித்தது. டெல்லி விமான நிலையத்தில் தற்செயலாக சூர்யாவை சந்தித்தேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் கங்குவா. இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் நவ.14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் புரமோஷன் வேலைகள் நடைப்பெற்று வருகின்றன. பான் இந்தியா படமாக உருவாகி உள்ள இப்படத்தின் புரமோஷன் பணிகள் மும்பையில் தொடங்கி டெல்லியில் நடைபெற்று வருகிறது.

இதனால் படக்குழு மிகவும் பிஸியாக இருந்து வருகிறது. சூர்யாவும் டெல்லி, சென்னை என மாறி மாறி சென்றுக் கொண்டிருக்கிறார். இதனிடையே நடிகர் சூர்யாவை டெல்லி விமான நிலையத்தில் ரமேஷ் சென்னித்தலா சந்தித்துள்ளார்.

Tags :
actorDelhi airportKerala PoliticianRamesh ChennithalaSuriya
Advertisement
Next Article