Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ராணுவ தலைமை தளபதியாக உபேந்திர திவேதி நியமனம்!

08:54 AM Jun 12, 2024 IST | Web Editor
Advertisement

நாட்டின் ராணுவ தலைமை தளபதியாக உபேந்திர திவேதியை நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement

ராணுவத்தின் தளபதியாக பணியாற்றி வரும் லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதியை,  அடுத்த ராணுவத் தலைமை தளபதியாக நியமித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  தற்போதைய ராணுவத் தலைமை தளபதியான மனோஜ் பாண்டே  கடந்த மாதம் ஓய்வு பெற்ற நிலையில்,  இம் மாதம் 30-ம் தேதி வரை அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

புதிய தலைமை தளபதி திவிவேதி ஜூன் 30-ந் தேதி பொறுப்பேற்கிறார்.  ஜூலை 1,  1964 இல் பிறந்த திவேதி,  டிசம்பர் 1984 இல் ராணுவத்தின் காலாட்படையில் (ஜம்மு & காஷ்மீர் ரைபிள்ஸ்) பணியில் சேர்ந்தார்.

”கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் நீடித்த அவரது நீண்ட மற்றும் புகழ் பெற்ற சேவையில், பல்வேறு கட்டளை,  பணியாளர்கள்,  பயிற்றுவிப்பு மற்றும் வெளிநாட்டு நியமனங்களில் பணியாற்றியுள்ளார்.   உபேந்திரா திவேதியின் கட்டளை நியமனங்களில் ரெஜிமென்ட் (18 ஜம்மு & காஷ்மீர் ரைபிள்ஸ்), பிரிகேட் (26 பிரிவு அசாம் ரைபிள்ஸ்), டிஐஜி, அசாம் ரைபிள்ஸ் (கிழக்கு) மற்றும் 9 கார்ப்ஸ் ஆகியவை அடங்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திவேதி,  ராணுவப் பணியாளர்களின் துணைத் தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன், டைரக்டர் ஜெனரல் காலாட்படை மற்றும் 2022-2024 வரையிலான வடக்குக் கட்டளைத் தலைமையகத்தின் தலைமைப் பொது அதிகாரி உள்ளிட்ட முக்கியமான பதவிகளை வகித்துள்ளார்.

Tags :
army chiefLieutenant GeneralUpendra Dwivedi
Advertisement
Next Article