Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“#RCB-க்கு கோப்பையை வென்று கொடுப்போம்” - தினேஷ் கார்த்திக்!

06:54 AM Sep 18, 2024 IST | Web Editor
Advertisement

ஆர்சிபி அணிக்கு கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்பதுதான் தனது கனவு எனவும், அதற்கு முயற்சி செய்வதாகவும் அந்த அணியின் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

Advertisement

லெஜண்ட்ரி கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் சதர்ன் அணிக்கான ஜெர்சி மற்றும் வீரர்கள் அறிமுகம் சென்னை தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான மைக்கேல் பெவன் (ஆஸ்திரேலியா), தினேஷ் கார்த்திக், பார்தீவ் பட்டேல், கேதர் காதவ் மற்றும் நடிகை ஐஸ்வரியா ராஜேஷ் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

அப்போது தினேஷ் கார்த்திக் செய்தியாளர்களிடம் பேசியதாவது;

“லெஜண்ட்ரி கிரிக்கெட் ஓய்வு பெற்ற வீரர்களின் திறமையை வெளிக்கொண்டுவரும் முக்கியமான கிரிக்கெட் தொடராக அமையும். இதன் மூலம் நிறைய திறமைசாளிகளை உருவாக்கவும் முடியும். இனி வரும் காலங்களில் கிரிக்கெட்டில் பெண்களுக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. பெண்கள் தைரியமாக கிரிக்கெட்டை தேர்வு செய்யலாம்.

ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இணைவது மகிழ்ச்சியான தருணம். எப்படியாவது ஆர்சிபிக்கு கோப்பையை வென்று கொடுப்போம். அதற்கு முயற்சி செய்வேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட வேண்டும் என்பது எனது ஆசை. ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட்டது மிகவும் வரவேற்கதக்கது. அவற்றைக் காண மிகவும் ஆவலாக காத்திருக்கிறேன். இந்திய அணியின் பயிற்சியாளராகும் ஆசை இப்போதைக்கு இல்லை என்றாலும், ஒருநாள் நடக்கும்” இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
லெஜண்ட்ரி கிரிக்கெட் போட்டிCricketCskDinesh KarthikRCB
Advertisement
Next Article