Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"அஞ்சலை அம்மாள் ஆற்றிய அரும்பணிகளைப் போற்றிப் பெருமை கொள்வோம்" - தவெக தலைவர் விஜய் அறிக்கை!

அஞ்சலை அம்மாள் தமிழ்நாட்டுக்கு ஆற்றிய அரும்பணிகளைப் போற்றிப் பெருமை கொள்வோம் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
10:37 AM Jun 01, 2025 IST | Web Editor
அஞ்சலை அம்மாள் தமிழ்நாட்டுக்கு ஆற்றிய அரும்பணிகளைப் போற்றிப் பெருமை கொள்வோம் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
Advertisement

நடிகர் விஜய் கடந்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் 2-ம் தேதி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். கடந்த அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் பிரமாண்டமான மாநாட்டை நடத்தினார். இந்த மாநாட்டில், கட்சியின் கொள்கை தலைவர்களாக தந்தை பெரியார், அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் பெயர்களை அவர் அறிவித்தார்.

Advertisement

தொடர்ந்து, 2026 சட்டப்பேரவைத் தேர்தலை இலக்காக கொண்டு கட்சி வேலைகளில் விஜய் தீவிரம் காட்டி வருகிறார். இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி கடந்த பிப்.2ம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைந்தது. இதனையொட்டி அன்றைய தினம் பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் கொள்கைத் தலைவர்களான பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலுநாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாள் ஆகியோரது சிலைகளை திறந்துவைத்தார்.

இந்த நிலையில், அஞ்சலை அம்மாளின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, தவெக தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அதில் கூறப்பட்டுள்ளதாவது,

"இந்த மண்ணை நேசித்து, இந்த மண்ணின் மக்களுக்காக உழைத்து, தமது வாழ்நாள் முழுவதும் அஞ்சாமையுடன் மக்கள் சேவையாற்றியவர், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள். கட்சியின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாளின் பிறந்த நாளில், தமிழ்நாட்டுக்கு அவர் ஆற்றிய அரும்பணிகளைப் போற்றிப் பெருமை கொள்வோம்"

இவ்வாறு தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

Advertisement
Next Article