Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விஜய் இன்று சொல்லப் போகும் குட்டி ஸ்டோரி என்ன? கொட்டும் மழையிலும் நேரு விளையாட்டு அரங்கில் குவிந்த ரசிகர்கள்!

03:43 PM Nov 01, 2023 IST | Web Editor
Advertisement

சென்னையில் இன்று நடைபெறும் லியோ வெற்றி விழா நடைபெறவுள்ள நிலையில் அரங்கத்திற்குள் நுழைய நீண்ட வரிசையில் கொட்டும் மழையிலும் ரசிகர்கள் நனைந்தபடி சென்றனர். 

Advertisement

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படம் முதல் நாளில் ரூ 148 கோடியை வசூலித்த நிலையில்,  7 நாட்களில் 461 கோடி ரூபாய் வசூலை அள்ளியதாக தயாரிப்பு நிறுவனம் அதிரடியாக அறிவிப்பை வெளியிட்டது.  அதே நேரத்தில், 12 நாட்களில் சர்வதேச அளவில் ரூ.540 கோடியை வசூல் செய்துள்ளது.  லியோ வெற்றி விழா கொண்டாட்டத்துக்கு காவல்துறை பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது.

லியோ வெற்றி விழா கொண்டாட்டம் இன்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற உள்ளது.  இந்த விழாவில்,  நடிகர் விஜய் கலந்து கொள்ள இருக்கிறார்.  இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சை கேட்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில்,  இசைவெளியீட்டு விழா பாதுகாப்பு காரணத்தால் ரத்து செய்யப்பட்டது.

இன்று நடைபெற உள்ள லியோ வெற்றி விழாவுக்கு,  காவல்துறை நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உள்ளது.  விழாவிற்கு வரும் ரசிகர்கர்களிடம் பாஸ் இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்றும்,  அதோடு ரசிகர் மன்ற அட்டை மற்றும் ஆதார் அட்டை கொண்டு வர வேண்டும் என்றும் என்று பல விதிமுறைகளை காவல்துறை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில்,  இன்று மாலை 6 மணிக்குத் துவங்க உள்ள இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த ரசிகர்கள் அரங்கத்திற்குள் நீண்ட வரிசையில் கொட்டும் மழையிலும் நனைந்தபடி சென்றனர்.

 

Advertisement
Next Article