Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜூன் 20-ல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் – சபாநாயகர் அப்பாவு!

01:18 PM Jun 11, 2024 IST | Web Editor
Advertisement

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முன்னதாகவே அதாவது வரும் 20-ந் தேதி  தொடங்கவுள்ளதாக பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Advertisement

நெல்லையில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு செய்தியாளர்களிடன் சந்தித்து பேசியதாவது:

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 24-க்கு பதில் ஜூன் 20 ஆம் தேதியே தொடங்கவுள்ளது.  விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளதால் பேரவை முன்னதாகவே தொடங்கப்படுகிறது.

மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்காக ஜூன் 20 ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குகிறது.  விளவங்கோடு தொகுதியில் வென்ற தாரகை கத்பட் நாளை (ஜூன் 12) காலை 11 மணிக்கு பதவியேற்கிறார்.  நாளைய தினம் சட்டப்பேரவை தலைவர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது என்று தெரிவித்தார்.

Tags :
AppavuTN GovtTN Legislative Assembly
Advertisement
Next Article