உலகின் உயரமான மலைகளில் ஏறி சாதனை படைத்த முத்தமிழ் செல்வி - கனிமொழி எம்.பி. பாராட்டு!
விருதுநகரைச் சேர்ந்த முத்தமிழ் செல்வி. இவர் உலகின் 7 கண்டங்களில் உள்ள மிக உயரமான சிகரங்களான எவரெஸ்ட், எல்புரூஸ், கிளிமாஞ்சாரோ உள்ளிட்டவற்றில் ஏறி சாதனை படைத்துள்ளார். 2 பெண் குழந்தைகளுக்கு தாயான இவர், தனது முதல் முயற்சியிலேயே எவரெஸ்டை அடைந்தவர். கடந்த 2023ம் ஆண்டு எவரெஸ்ட்டில் ஏறி சாதனை புரிந்த இவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில், தூத்துக்குடி திமுக எம்.பி. கனிமொழி கருணாநிதி முத்தமிழ் செல்விக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பில் ரஜினியுடன் பிறந்தநாளை கொண்டாடிய நெல்சன்
இதுகுறித்து கனிமொழி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
"உலகின் உயரமான மலைகளை ஏறிக் கடந்து சாதனை படைத்துள்ள விருதுநகரைச் சேர்ந்த முத்தமிழ் செல்விக்கு எனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான பெண்கள் சிகரத்தை அடைய, அவர் தொட்ட சிகரம் ஒரு புதிய உந்துசக்தி. அவர் மேன்மேலும் பல்வேறு சாதனைகளை படைக்க எனது மனமார்ந்த வாழ்த்துகள்"
இவ்வாறு தூத்துக்குடி திமுக எம்.பி. கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளார்.