Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து குறைவால் வெங்காயம்,தக்காளி விலை உயர்வு!

08:52 AM Jun 11, 2024 IST | Web Editor
Advertisement

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் மற்றும் தக்காளி விலை மேலும் அதிகரித்துள்ளது. 

Advertisement

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளியை தொடர்ந்து வெங்காயத்தின் விலையும் அதிகரித்து வருகிறது. கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக தினசரி 45 லாரிகளில் வெங்காயம் விற்பனைக்கு வரும் கடந்த சில நாள்களாக 30 லாரிகளாக குறைந்து விட்டது.

இதனால் கடந்த சில நாள்களுக்கு முன்பு வரை மொத்த விற்பனையில் ஒரு கிலோ நாசிக் வெங்காயம் ரூ.30}க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது விலை அதிகரித்து ரூ.42}க்கு விற்கப்படுகிறது. வெளிச் சந்தையில் உள்ள காய்கறி மற்றும் சூப்பர் மார்க்கெட்களில் வெங்காயம் கிலோ ரூ.55 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக வெங்காய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளதால் வெங்காயம் விலை அதிகரித்து இருப்பதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், மொத்த விற்பனையில் தக்காளி ஒரு கிலோ ரூ.46}க்கும் வெளிச் சந்தையில் உள்ள காய்கறி கடைகளில் கிலோ ரூ.60 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சமையலுக்கு தினசரி பயன்படுத்தப்படும் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகளை கவலை அடைந்துள்ளனர்.

Tags :
ChennaiKOYAMBEDU MARKETonion
Advertisement
Next Article