Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#KolkataDoctorMurder | உச்சநீதிமன்றம் எழுப்பிய முக்கிய கேள்விகள்...

12:51 PM Aug 20, 2024 IST | Web Editor
Advertisement

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர்(31) பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இந்த சம்பவத்தில் மருத்துவமனையில் தன்னார்வலராக பணியாற்றி வந்த சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து, தற்போது வழக்கினை சிபிஐ விசாரித்து வருகிறது.

பெண் மருத்துவர் கொலை சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. தொடர்ந்து 9 ஆவது நாளாக கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட், ஜேபி பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு தாமாக முன்வந்து விசாரித்தது. அப்போது, அவர்கள் எழுப்பிய முக்கிய கேள்விகள் வருமாறு:

மருத்துவமனைகளில் டாக்டர்களுக்கே பாதுகாப்பான சூழல் இல்லை என்றும் நீதிபதிகள் விமர்சித்தனர். மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக, தேசிய அளவில் குழு ஒன்றை அமைத்தும் உத்தரவிட்டனர்.

பணிபுரியும் இடங்களில் மருத்துவர்களின் பாதுகாப்பு பிரச்சினைக்கு உரியதாகவே உள்ளது. பயிற்சி மருத்துவரின் உயிரிழப்பானது மருத்துவர்களின் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளை எழுப்புகிறது. இது ஆழ்ந்த கவலை அளிக்கிறது. கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கின் விசாரணை நிலையை அறிக்கையாக சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும். வரும் வியாழக்கிழமைக்குள் முழு அறிக்கையையும் தாக்கல் செய்யவேண்டும்" என்று உத்தரவிட்டனர்.

Tags :
Doctor DeathDoctor ProtestKolkataKolkata DoctorSupreme Court of india
Advertisement
Next Article