Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கவின் கொலை வழக்கு - சிபிசிஐடி எஸ்.பி. தலைமையில் விசாரணை துவக்கம்!

கவின் கொலை வழக்கில் கைதான குற்றவாளிகளை சிபிசிஐடி , எஸ் பி தலைமையில் விசாரணை செய்ய தொடங்கியுள்ளனர்.
01:02 PM Aug 12, 2025 IST | Web Editor
கவின் கொலை வழக்கில் கைதான குற்றவாளிகளை சிபிசிஐடி , எஸ் பி தலைமையில் விசாரணை செய்ய தொடங்கியுள்ளனர்.
Advertisement

 

Advertisement

திருநெல்வேலியில் ஐடி ஊழியர் கவின் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கு, தற்போது சிபிசிஐடி போலீசாரால் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளிகளாகக் கருதப்படும் சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகியோர் நீதிமன்றக் காவலில் இருந்து விசாரணைக்காக சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணையைத் தீவிரப்படுத்தும் வகையில், சிபிசிஐடி எஸ்.பி. ஜவகர் சென்னையில் இருந்து விமானம் மூலம் நெல்லைக்கு வந்துள்ளார். தற்போது, நெல்லை சிபிசிஐடி அலுவலகத்தில் எஸ்.பி. ஜவகர் மற்றும் மூன்று துணை காவல் கண்காணிப்பாளர்கள் (டிஎஸ்பி), பத்திற்கும் மேற்பட்ட காவல் ஆய்வாளர்கள் ஆகியோர் தலைமையில் விசாரணை தொடங்கியுள்ளது.

விசாரணை நடைபெறும் சிபிசிஐடி அலுவலகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த விசாரணை மூலம், கொலைக்கான உண்மையான காரணம், சம்பவத்தின்போது நிகழ்ந்தவை மற்றும் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் குறித்த முக்கியத் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதி, சிபிசிஐடி குழு விரைவாகச் செயல்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைப்பதை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
CBCIDinvestigationkavinMurderCaseMurderTrialTirunelveli
Advertisement
Next Article