கருணாநிதி நினைவு நாள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதி பேரணி!
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஏழாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து எம்.பி.க்கள், அமைச்சர்கள் கலைஞர் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலைஞர் கருணாநிதி நினைவிடம் வரை அமைதி பேரணி நடைபெற்றது. சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் நோக்கி சென்ற அமைதி பேரணியில் திமுக எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் பங்கேற்றனர். இறுதியாக மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.