Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையில் மாலை வைத்து மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி!

04:15 PM Jun 01, 2024 IST | Web Editor
Advertisement

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி,  அங்குள்ள திருவள்ளுவர் சிலையின் பாதத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Advertisement

2024 மக்களவைத் தேர்தலின் ஏழாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப் பதிவு, எட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில்,  கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி மே 30-ஆம் தேதி அன்று தனது தியானத்தை தொடங்கினார்.

இந்நிலையில் இன்று,  சூரிய உதயத்தின்போது,  ''சூரிய அர்க்யா'' செய்த பின்னர் பிரதமர் மோடி தனது மூன்றாவது நாள் தியானத்தை இன்று (ஜூன் 1) காலையில் தொடங்கிய நிலையில், பிற்பகல் 3 மணி அளவில் முடித்துக்கொண்டார்.

இதன் வாயிலாக பிரதமர் மோடி 45 மணி நேரமாக மேற்கொண்ட தியானம் நிறைவடைந்தது.

பின்னர் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து வெளியே வந்த மோடி படகு மூலம் திருவள்ளுவர் சிலையை அடைந்தார்.  அங்கு திருவள்ளுவர் சிலையில் பாதத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  இன்று மாலை 6 மணி உடன் நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நிறைவடைய உள்ள நிலையில் , பிரதமர் மோடி டெல்லி சென்றார்.

Tags :
KanyakumariKeralaNarendra modinews7 tamilNews7 Tamil UpdatesTamilNaduThiruvalluvar
Advertisement
Next Article