Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நவ.7-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!

09:34 PM Oct 25, 2024 IST | Web Editor
Advertisement

கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு, நவ.7ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், கந்த சஷ்டி திருவிழா அடுத்த மாதம் நவம்பர் 2-ஆம் தேதி ஆரம்பித்து, 13-ஆம் தேதி வரை 12 நாட்கள் நடைபெற உள்ளது.விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், திருவிழாவின் ஆறாம் நாளான நவம்பர் 7-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் நவ.7 வியாழக்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கந்தசஷ்டி திருவிழா சூரசம்ஹாரம் நிகழ்ச்சி 2024-ம் ஆண்டு நவம்பர் 7-ம் நாள் நடைபெறுவதை முன்னிட்டு, 07.11.2024 வியாழக்கிழமை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
BakthifestivalholidayKanda Sashti TiruvizhaThoothukudiTiruchendur Murugan Temple
Advertisement
Next Article