Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருச்செந்தூர்: யாகசாலை பூஜைகளுடன் துவங்கிய கந்த சஷ்டி திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம்!

01:52 PM Nov 13, 2023 IST | Web Editor
Advertisement

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜைகளுடன் கோலாகலமாகத் துவங்கியது. லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் தொடங்கினர்.

Advertisement

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர்
 சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறக்கூடிய முக்கிய விழாக்களில் ஒன்றான புகழ் பெற்ற கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன்
இன்று காலை யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 1.30
மணிக்கு விஸ்வரூப தரிசனமும்,  2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.

இதையும் படியுங்கள்:பட்டாசு சத்தத்திற்கு பயந்து வீட்டிற்குள் பதுங்கிய சிறுத்தை; நீலகிரியில் அதிர்ச்சி சம்பவம்!

இந்த நிலையில், காலை 5.30 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலை மண்டபத்தில் எழுந்தருளினார்.  அதனை தொடர்ந்து காலை 07-00 மணிக்கு யாகசாலை பூஜைகளுடன் கந்த சஷ்டி திருவிழா வெகு விமர்சையாக துவங்கியது .

 தமிழ்நாடு மட்டுமல்லாது வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி பச்சை நிற உடை அணிந்து விரதம் இருக்க துவங்கினர்.

மேலும், விரதம் இருக்கும் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக கோயில் நிர்வாகம்
சார்பில் 26 இடங்களில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கி விரதம் இருக்க
தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன.

அதனை தொடர்ந்து, திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்காரம் வருகிற 18-ந் தேதி நடைபெறுகிறது.

Tags :
BeginsdevoteesKandaShashtiFestivalmurugantempleTamilNaduThoothukuditiruchendurYagasalaPujas
Advertisement
Next Article