Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்: பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு!

08:26 AM Jun 26, 2024 IST | Web Editor
Advertisement

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வந்தவரும், சேலம் மருத்துவமனையில் ஒருவரும் இன்று உயிரிழந்தனர்.  இதனையடுத்து பலி எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. 

Advertisement

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு,
மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 20 பேர்
அனுமதிக்கப்பட்ட நிலையில் 3-பேர் கொண்டு வந்த தினத்தன்றே சிகிச்சை
அளிப்பதற்கு முன்பாக உயிரிழந்தனர்.

6 பேர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில்,  11 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  இந்நிலையில் இன்று காலை ஏசுதாஸ்(35) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் தற்போது ஜிப்மர் மருத்துவமனையில் 10- பேர் சிகிச்சைபெற்று வருவதாகவும் ஜிப்மர் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே,  சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஞ்சித் குமார் (34) என்பவர் சிகிச்சை பலனின்று உயிரிழந்தார்.  மேலும் தொடர்ந்து 27 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன்மூலம் கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62-ஆக உயர்ந்துள்ளது.

Tags :
KallakurichiliquorPuducherry
Advertisement
Next Article